கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு இளைஞர்கள் இருவர் பலி(திருத்தம்)

கட்டாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்துச்சம்பவத்தில் மட்டக்களப்பு-மாவட்டத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட கோவில் போரதீவை சேர்ந்த ச.சுகந்தன் என்பவரும் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட துறைநீலாவணையை சேர்ந்த ச.துவாரகன் என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவரும் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கும்போது லொறி ஒன்றுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அண்மையில் கூட கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.