கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கல்வி அமைச்சு உட்பட இரு அமைச்சுகள் வழங்கப்பட்டு சற்று முன்னர் ஆளுனர் முன்பாக பதவிப்பிரமாணமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் கல்வி அமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் உறுப்பினர் ஆரியவதி கலபதி பதவியேற்றிருந்தார்.
இந்த நிலையில் கிழக்கு மாகாணசபையில் உள்ள முரண்பாடுகளை போக்கும் வகையில் அனைத்து கட்சிகளும் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவருகின்றது.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தண்டாயுதபாணி கல்வி அமைச்சராகவும் விவசாய அமைச்சராக மட்டக்களப்பினை சேர்ந்த உறுப்பினர் கி.துரைராஜசிங்கமும் இன்று பிற்பகல் கிழக்கு மாகாண ஆளுனர் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துள்ளதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் கல்வி அமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் உறுப்பினர் ஆரியவதி கலபதி பதவியேற்றிருந்தார்.
இந்த நிலையில் கிழக்கு மாகாணசபையில் உள்ள முரண்பாடுகளை போக்கும் வகையில் அனைத்து கட்சிகளும் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவருகின்றது.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தண்டாயுதபாணி கல்வி அமைச்சராகவும் விவசாய அமைச்சராக மட்டக்களப்பினை சேர்ந்த உறுப்பினர் கி.துரைராஜசிங்கமும் இன்று பிற்பகல் கிழக்கு மாகாண ஆளுனர் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துள்ளதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.