வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான சீகிரியாவின் பளிங்கு சுவரில், தனது பெயரை எழுதிய மட்டக்களப்பை சேர்ந்த சின்னதம்பி உதேனி (23) என்ற யுவதிக்கு, தம்புள்ளை நீதவான் நீதிமன்ற நீதவான் சஞ்சீவ ரம்யகுமார இரண்டு வருட கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி தனது தோழர்களுடன் சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த குறித்த யுவதி, சீகிரியாவின் கண்ணாடி சுவரில் பெயரை எழுதிய குற்றச்சாட்டில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை (02) குறித்த யுவதியை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(நன்றி தமிழ் மிரர்)
கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி தனது தோழர்களுடன் சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த குறித்த யுவதி, சீகிரியாவின் கண்ணாடி சுவரில் பெயரை எழுதிய குற்றச்சாட்டில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை (02) குறித்த யுவதியை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(நன்றி தமிழ் மிரர்)