மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கறுவேப்பங்கேணி, விபுலானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

(லியோன்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட கறுவேப்பங்கேணி, விபுலானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி சோழன் இல்லம் முதலிடத்தினைப்பெற்றுக்கொண்டது.


பாடசாலை அதிபர் ஞா.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு செலான் வங்கி முகாமையாளர் பத்மஸ்ரீ இளங்கோ,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன்,டாக்டர் திருமதி சூ.பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன் மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இதன்போது பல்வேறு சுவட்டு போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் பெற்றோருக்கான,ஆசிரியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டன.

விளையாட்டு நிகழ்வுகளைத்தொடர்ந்து மாணவர்களின் உடற் பயிற்சி கண்காட்சி நடைபெற்றதுடன் அதிதிகளின் உரையினைத்தொடர்ந்து வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.

நடத்தப்பட்ட போட்டிகளின் அடிப்படையில் 467 புள்ளிகளைப்பெற்று சோழன் இல்லம் முதல் இடத்தினையும் 396 புள்ளிகளைப்பெற்று சேரன் இல்லம் இரண்டு இடத்தினையும் 348 புள்ளிகளைப்பெற்று பாண்டியன் இல்லம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.