எதுவென்று தெரியாத விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் நாங்கள் எமது வாழ்வில் நல்லதை செய்வதற்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் ஆணையாளர் ரி.நவநீதன் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை(22) மாலை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்ற ஜனாதிபதி விருது பெற்ற சாரணர்களுக்கு சின்னம் சூட்டும், சாரண ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட ஆணையாளர் பி.ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சாரண தலைமை ஆசிரியர்கள்,சாரண ஆசிரியர்கள்,சாரணர்கள் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சமூகத்தில் எந்தவிதமான நிலைமைகளுக்கும்,போராட்டங்களுக்கும் கஸ்டங்களுக்கும் மத்தியில் எதிர்நீச்சல்போட்டு முன்னுக்குவருபவர்களே உண்மையான சாரணர்கள்.அதனை என்னுடைய வாழ்வில் அனுபவமாக கொண்டுள்ளேன்.
நான் கனடாவுக்கு இங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றபோது அங்கு எனக்கு குடியுரிமை தருவதற்கு தயங்கிய காலத்தில் எனது குடியுரிமை கோரிக்கை விண்ணபத்தில் நான் சாரண மாணவனாக இருந்தது தொடர்பான தகவலை வழங்கியபோது எனக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் நீக்கப்பட்டு மறுகனமே நிரந்தர வதிவுரைமை பெற்றுத்தரப்பட்டது.
அது சாரண மாணவன் என்ற ஒரேயொரு காரணத்திற்காக மட்டுமே அந்த நடவடிக்கையெடுக்கப்பட்டது.அதனால்தான் நான் சாரணராக இருப்பதற்கு பெருமைப்படுகின்றேன்.
ஒவ்வொருவரும் சாரணராக இருப்பதற்கு பெருமைப்படவேண்டும். மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டிருந்த பேடன் பவல் சிலையை நிறுவியத்தில் பல சரித்திரங்கள் உள்ளது.
நாங்கள் அந்த சிலையை நகரில் நிறுவியபோது எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் இருக்கவில்லை.மணிக்கூண்டு கோபுரத்துக்கு இடப்பக்கம் அந்த சிலையை நிறுவினோம்.அது இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டது.
நான் கனடாவில் இருந்து இங்குவந்தபோது மட்;டக்களப்பு மாநகரசபையின் ஓரத்திலே நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை கண்டேன்.நாங்கள் எதுக்கு முக்கியத்துவமளிக்கவேண்டுமோ அதற்கு முக்கியத்துவமளிப்பதில்லை.நாங்கள் எதற்கு முக்கியத்துவம் வழங்க கூடாதோ அதற்கு முக்கியத்துவம் அளிப்போம்.
எதுவென்று தெரியாத விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் நாங்கள் எமது வாழ்வில் நல்லதை செய்வதற்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை.அது எமது சமூகத்தில் உள்ள குறைபாடா என்பது தெரியவில்லை.அந்த பேடன் பவல் சிலை மூன்று தடவைகள் அகற்றப்பட்டுள்ளது.நான்காவது தடவையாக பொருத்தமற்ற இடத்தில்,ஒதுக்குப்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் அந்த சிலையினை பொருத்தமான இடத்தில் நிலையாக வைக்கப்படும் என்பதை நான் இங்கு ஒரு சாரணனாக கூறிக்கொள்கிறேன்.
இன்று ஞாயிற்றுக்கிழமை(22) மாலை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்ற ஜனாதிபதி விருது பெற்ற சாரணர்களுக்கு சின்னம் சூட்டும், சாரண ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட ஆணையாளர் பி.ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சாரண தலைமை ஆசிரியர்கள்,சாரண ஆசிரியர்கள்,சாரணர்கள் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சமூகத்தில் எந்தவிதமான நிலைமைகளுக்கும்,போராட்டங்களுக்கும் கஸ்டங்களுக்கும் மத்தியில் எதிர்நீச்சல்போட்டு முன்னுக்குவருபவர்களே உண்மையான சாரணர்கள்.அதனை என்னுடைய வாழ்வில் அனுபவமாக கொண்டுள்ளேன்.
நான் கனடாவுக்கு இங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றபோது அங்கு எனக்கு குடியுரிமை தருவதற்கு தயங்கிய காலத்தில் எனது குடியுரிமை கோரிக்கை விண்ணபத்தில் நான் சாரண மாணவனாக இருந்தது தொடர்பான தகவலை வழங்கியபோது எனக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் நீக்கப்பட்டு மறுகனமே நிரந்தர வதிவுரைமை பெற்றுத்தரப்பட்டது.
அது சாரண மாணவன் என்ற ஒரேயொரு காரணத்திற்காக மட்டுமே அந்த நடவடிக்கையெடுக்கப்பட்டது.அதனால்தான் நான் சாரணராக இருப்பதற்கு பெருமைப்படுகின்றேன்.
ஒவ்வொருவரும் சாரணராக இருப்பதற்கு பெருமைப்படவேண்டும். மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டிருந்த பேடன் பவல் சிலையை நிறுவியத்தில் பல சரித்திரங்கள் உள்ளது.
நாங்கள் அந்த சிலையை நகரில் நிறுவியபோது எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் இருக்கவில்லை.மணிக்கூண்டு கோபுரத்துக்கு இடப்பக்கம் அந்த சிலையை நிறுவினோம்.அது இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டது.
நான் கனடாவில் இருந்து இங்குவந்தபோது மட்;டக்களப்பு மாநகரசபையின் ஓரத்திலே நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை கண்டேன்.நாங்கள் எதுக்கு முக்கியத்துவமளிக்கவேண்டுமோ அதற்கு முக்கியத்துவமளிப்பதில்லை.நாங்கள் எதற்கு முக்கியத்துவம் வழங்க கூடாதோ அதற்கு முக்கியத்துவம் அளிப்போம்.
எதுவென்று தெரியாத விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் நாங்கள் எமது வாழ்வில் நல்லதை செய்வதற்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை.அது எமது சமூகத்தில் உள்ள குறைபாடா என்பது தெரியவில்லை.அந்த பேடன் பவல் சிலை மூன்று தடவைகள் அகற்றப்பட்டுள்ளது.நான்காவது தடவையாக பொருத்தமற்ற இடத்தில்,ஒதுக்குப்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் அந்த சிலையினை பொருத்தமான இடத்தில் நிலையாக வைக்கப்படும் என்பதை நான் இங்கு ஒரு சாரணனாக கூறிக்கொள்கிறேன்.