ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீகற்பக விக்னேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீகற்பக விக்னேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.


கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த உற்சவத்தில் நேற்று தெப்பத்திருவிழா நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்களின் தலைமையில் இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூல மூர்த்திக்கு அபிசேகம் செய்யப்பட்டது.