விழுதுகள் மேம்பாட்டு நிலையத்தின் நாங்கள் மற்றும் சமாசம் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
புதிய அரசாங்கம் காணாமல்போன தமது உறவுகளை மீட்பதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்தவும் தமது கோரிக்கை தொடர்பில் விரிவான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இந்த பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு,கல்லடி பாலத்துக்கு அருகில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் காந்தி பூங்கா வரை சென்றது.
அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகளை இழந்த தாயும் தனது புதல்வர்களின் உருவப்படத்துடன் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார்.
இதன்போது எமது உறவுகளை மீட்டுத்தாருங்கள்,அப்பாவி கைதிகளை விடுதலைசெய், எமது உடன்பிறப்புகளை விடுதலைசெய்,தமிழ் மக்களை இனியும் புறக்கணிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.