வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கும் ஆனால் விநாயகனே வல்வினையை வேரறுக்க வல்லவன் அவனுக்கு அவனே தலைவன் அதனால் விநாயகன் எனப்பட்டான்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புறநகர்ப்பகுதியான கல்லடிப் பிரதேசம் ஆண்மீக மணம் கமழும் புண்ணிய பிரதேசமாகத் திகழ்கின்றது. கல்லடியை அண்டிய புறநகர்ப் பிரதேசத்தில் கல்லடி உப்போடை, கல்லடி முகத்துவாரம் என பல கிராமங்கள் அமைந்துள்ளன. கிழக்கே வங்கக் கடல் மேற்கே மீன்பாடும் வாவி, இராமகிருஸ்ண மிசனும், திருச்செந்தூர் முருகன் ஆலயமும், சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகமும், சப்தரிசி மண்டலமும், ஆனந்தசாலையும் இப்புறநகர் பகுதிகளில் அமைந்திருக்கின்றமை ஆண்மீக மணம் கமழக் காரணமாகும்.
இதற்கு மேலாக முருகன், பிள்ளையார், பேச்சியம்மன், மாரியம்மன், கடல்நாச்சியம்மன், காயத்ரி, வி~;ணு என பல ஆலயங்கள் சத்தியசாயி நிலையம், ஹரே ராமா ஹரே கிருஸ்ணா இயக்கம் என்பனவும் இறை வழிபாடுகளுக்கு உறுதுணையாகவும் ஆன்மீகத் தாகத்திற்கு தனணி போடும் இடங்களாகவும் அமையப்பெற்றுள்ளவை சிறப்பாகும்.
இந்தவகையில் கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயமும் ஒன்று. கல்லடிப்பாலம் கட்டப்பட்டு தற்போதைய கல்முனை மட்டக்களப்பு வீதி திறக்கப்படும் வரை பழைய கல்முனை வீதியே புழக்கத்தில் இருந்தது. புளியந்தீவிற்கும் மட்டக்களப்பின் தென்பகுதிக்கும் தரைவழிப்பாதையும் இருக்கவில்லை. கல்லடிக்கும் புளியந்தீவில் அமைந்துள்ள கச்சேரிக்கும் இடையே இருந்த துறையூடாகவே பயணம் மேற்கொள்ளப்பட்டது.
பழைய கல்முனை வீதியும் கல்லடித் துறை வீதி சந்திக்கும் இடத்திலேயே இப்பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. கல்லடித் துறை வீதி தற்போது பிள்ளையார் ஆலய வீதி என பெயரிடப்பட்டுள்ளது.
காணாபத்திய நெறியில் முழுமுதற் கடவுள் பிள்ளையார் இவருக்கு கணபதி, விக்கிணேஸ்வரர், வக்ரதுண்டா, லம்போதரர், கணேசன், ஆனைமுகன், ஐங்கரன், முன்னவன், ஓங்காரன், பிரணவசொரூபி, பேழைவயிற்றோன், பெருச்சாளி வாகனன் என பல பெயர்கள் இருக்கின்றன.
நாம் எந்தக் காரியத்தையும் ஆரம்பிக்கும் போது பிள்ளையாரை வழிபட வேண்டும் என்பது இந்துக்களின் நியதி. எதனையாவது எழுத ஆரம்பிக்கும் போது பிள்ளையார் சுழி இட்டு எழுதுவது இதனையே குறிக்கின்றது. ஒரு விடயத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டுவிட்டோம் என்றால் அததனை ஆரம்பித்து விட்டோம் என்பதே கருத்து. சிவன் முப்புரம் எரிக்கச் செல்லும் போது தன்னை வணங்காததால் பிள்ளையார் அவரின் தேரின் அச்சை உடைத்தார் என புராணங்கள் கூறுகின்றன.
எனவே துறைப்பயணம் ஆபத்தானது அக்காலத்தில் மரத்திலாலான சிறிய தோணிகளையே பயன்படுத்தி இருப்பர். எனவே பயணம் பாதுகாப்பாக அமைய வேண்டும் என வேண்டி பழைய கல்முனை வீதி கல்லடித் துறையடி வீதி சந்தியில் பிள்ளையார் வடிவிலான கல்லையே ஆரம்பத்தில் வைத்து வழிபட்டிருப்பார்கள் காலப்போக்கில் இங்கு ஆலயம் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
பிள்ளையாரின் பெரிய வயிறு அண்டங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிய பெருமையையும், மோதகம் ஏந்திய கரம் உலகைத் தாங்கிக் காக்கும் திறனையும் உணர்த்துகின்றன. மகா கணபதி, ஹரித்ரா கணபதி, உச்சிட்ட கணபதி, நவநீத கணபதி, சுவர்ண கணபதி, சந்தான கணபதி என ஆறு வகையான காணாபத்திய வழிபாட்டுக்குரிய கணபதியினது பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. காணாபத்திய கோட்பாடு கி.பி ஆறாம் நூற்றாண்டில் உருவானதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பிள்ளையார் வழிபாடு அதற்கு முன்னவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வல்லவை சித்தி புத்தி ஆகியோர் இவரிக் மனைவிமார் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. நீலசரஸ்வதியையும் சேர்த்து நான்கு சக்திகள் இருப்பதாகவும் அறியலாம்.
பாசம் ஏந்திய கை படைத்தலையும், தந்தம் ஏந்திய கை காத்தலையும், அங்குசம் ஏந்திய கை அழித்தலையும், தும்பிக்கை மறைத்தலையும், மோதகம் ஏந்திய கை கருணையையும் உணர்த்தும் வகையில் இவர் ஐந்தொழில்களையும் செய்வதாகவும் அறியலாம். பஞ்சமுக வழிபாடும் சில இடங்களில் நடைபெறுகின்றன. ஐந்தொழில்களையும் இது உணர்த்துவதாகவும் இருக்கலாம். சுக்கிரவாரம் ஆவணி சதுர்த்தி, மாதாந்த சதுர்த்தி, விநாயக விரதம் என்பன பிள்ளையாருக்குரிய சிறப்பான விரதங்களாகும்.
விநாயகரின் தோற்றம் பற்றி பல கதைகள் உள்ளன. அகத்திய முனிவர் விநாயக சரித்திரத்தினை இயற்றினார். பகவத்கீதை இந்துசமய வேதநூலாகக் கொள்ளப்படுகின்றது. இது மகாபாரதத்துடன் சம்மந்தப்பட்டது. மகாபாரதக் கதையை வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதினாராம். இதனை எழுதுவதற்கு பிள்ளையார் ஒரு நிபந்தனை வித்தித்தாரம் எழுதும் போது தனது எழுத்தாணியை நிறுத்த முடியாது அதற்கு ஏற்ப தொடர்ந்து சொல்ல வேண்டும் என்பதே நிபந்தனை. ஆம் அவ்வாறு சொல்லலாம் ஆனால் பொருளை விளங்கி எழுத வேண்டும் என்பது வியாசரின் நிபந்தனை. பிள்ளையார் பொருளை விளங்கும் போது கதையை மனதில் தயார் படுத்தி வைத்துவிடலாம் என்பது வியாசரின் வியூகமாக பிள்ளையாரை மடக்கிவிட்டார் வியாசர்.
கணபதி எனும் சொல்லில் வரும் 'க' ஞானத்தையும், 'ண' மோட்சத்தையும், 'பதி' தலைவன் என்பதையும் குறிக்கின்றது. பரப்பிரம்ம சொரூபியான கணபதி ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் தலைவன். கண் திரு~;டி கணபதி வடிவமும் உள்ளது. கண்திரு~;டி ஏற்படக்கூடாது என்பதற்காக சிலர் வீடுகளில் முன்பகுதியில் இ;வ்வடிவத்தினைப் புகைப்படம் மூலம் மாட்டி வைப்பார்கள்.
இவ்வாறாக சிறப்புப்பெற்ற பிள்ளையாருக்கு கல்லடியில் ஆலயம் எழுந்தது. கல்லடிப்பாளம் கட்டும் போது ஆலய முன் மண்டபம் கட்டப்பட்டது. 1917, 1959, 1995 ஆகிய ஆண்டுகளில் ஆலயம் கும்பாபிசேகம் செய்யப்பட்டது. வண்ணக்கு முறை பரிபாலனம் ஆரம்பத்தில் நிலவிய போதிலும் 1963ல் பிரிபாலனசபை ஏற்படுத்தப்பட்டது. ஆலய உற்சவத்தின் போது கடலில் தீர்த்தம் ஆடப்படுகின்றது. பண்டைக் காலத்தில் கடற்கரைக்குச் செல்லும் வழி காடாக இருந்தது. பக்தர்கள் ஒரே இரவில் காடு வெட்டி பாதை அமைத்துள்ளார்கள். இப்பாதை பின்னர் பிள்ளையார் ஆலய வீதியானது.
ஆலயம் இப்போது மீண்டும் புது மெருகூட்டப்பட்டுள்ளது. ஏதிர்வரும் 09ம் திகதி கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது. 08ம் திகதி எண்ணெய்க்காப்பு சாத்தும் கைங்கியம் இடம்பெறும்
உள்ளம் பெரும் கோயில் ஊண் உடம்பு ஆலயம் என்றார் திருமூலர். ஆலயம் நிறைகுடம் என்பன மனித உடலை ஆதாரமாகக் கொண்டே அமைக்கப்படுகின்றன. மனிதனுக்கு ஆறு ஆதாரம் ஆலயத்திற்கும் ஆறு மண்டபம். இந்த ஆறு ஆதாரங்களில் முதலாவதான மூலாதாரத்தில் விநாயகப் பெருமான் தனது நாயகியான வல்லவையுடன் இருந்து அருளாட்சி செய்வதாக சித்தவைத்திய அரிச்சுவடி கூறுகின்றது. 'மேருவதான வீட்டில் விளங்கிய கணேசன்றன்னைச் சேருவல்லவையினோடு சிறந்து வீற்றரசு செய்வான்' என்பது அப்பாடலின் இருவரிகளாகும்.
ஆன்மா இறைவனுடன் லயப்படும் இடம் ஆலயம். அக்காலத்தில் அமைதியான இயற்கைச் சூழலில் அமைந்த இவ்வாலயம் இன்று மாநகர சூழலில் உள்ளது. அத்தகைய சூழலும் நம் மனதை அமைதிப்படுத்தி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் அடைவோம். இறைவனுடன் இறண்டறக் கலந்து இறவா பேரின்பப் பெருவாழ்வு பெறுவோம். ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் தலைவனான கணபதி வழிபாடு அதற்கு வழிவகுக்கட்டும்.