கொக்கட்டிச்சோலையை சேர்ந்த இளைஞன் ஒருவர் டுபாயில் பணிபுரிந்துவிட்டு வந்தவேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் தம்மிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,
இன்று டுபாயில் பணிபுரிந்துவிட்டு இலங்கை வந்த கொக்கட்டிச்சோலை,6ஆம் வட்டாரத்தினை சேர்ந்த தாமோதரம் பாஸ்கரன் என்ற குடும்பஸ்த்தர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் தொடர்பில் அவரது கொக்கட்டிச்சோலை வீட்டுக்கு புலனாய்வுத்துறையினர் வந்து விசாரணை செய்துவிட்டு சென்றுள்ளனர்.விடுதலைப்புலி என்ற சந்தேகத்தின்பேரிலேயே குறித்த குடும்பஸ்த்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது இந்த நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்கள் சுதந்திரத்தினை அனுபவிக்கமுடியாது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
நாளை இலங்கையின் 67வது சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள இந்தவேளையில் சந்தேகத்தின்பேரில் தமிழ் இளைஞர்களை கைதுசெய்யும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவது வேதனைக்குரியவிடயம் ஆகும்.
இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்திற்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளும் வரையிலும் சுதந்திர காற்றினை சுவாசிக்கமுடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டு;ம்.
நாட்டுக்கு அனைவரையும் திரும்பிவருவமாறு புதிய அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ள நிலையில் தொழில்புரிந்துவிட்டு வந்த இளைஞன் கைதுசெய்யப்பட்டதானது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றார்.