மட்டக்களப்பு - கிரான்குளம் கடலில் நீராடச் சென்று காணாமல்போனவர் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக குறித்த பகுதியிலேயே மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் கிரான்குளம் தர்மபுரக் கடலில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, கடலில் மூழ்கிய அவர்களில், ஏழு பேரை மீனவர்களும் பொதுமக்களும் மீட்டெடுத்துள்ளனர்.
எனினும் ஒருவர் கடலில் காணாமல் போன நிலையில் நேற்று முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவந்தது.
இந்த நிலையில் காணாமல்போன கந்தசாமி ஜெயரூபன்(19) எனும் இளைஞனின் சடலம் காணாமல்போன பகுதியில் இருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் விசாரணையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
