இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர்,
மட்டக்களப்பு,செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈரலக்குளம் ஏ கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மாதவன,மயலத்தன்மடு,மாந்திரிஆறு ஆகிய பகுதிகளில் கால்நடை மேயச்சலுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 3000 ஏக்கர் காணிகளை அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையின விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இது தொடர்பில் கடந்த 4ஆம்,05ஆம்,06ஆம் திகதிகளில் வனபரிபாலன திணைக்களத்தினால் ஜி.பி.எஸ்.மூலம் நில அளவை செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மேய்ச்சல் தரைக்காணிகள் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் கஸ்டங்களுக்கு எதிர்நோக்கவேண்டிய நிலையேற்படும்.
அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களின் உதவியுடனும் சில சிங்க அரசியல்வாதிகளின் உதவியுடனும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 150000 கால்நடைகள் மேய்ச்சல் தரைக்காணிகளையே நம்பியுள்ளன.பல ஆண்டுகளாக கால்நடை வளர்ப்பாளர்கள் இப்பகுதியிலேயே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவருகின்றனர்.
கடந்த காலத்தில் இந்த விடயம் தொடர்பில் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்துரையாடியபோதிலும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் உள்ள நிலையே உள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினோம். குறித்த விடயம் தொடர்பில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.இந்த காணி வழங்களை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
