மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற விபத்தில் பெண்னொருவர் படுகாயம்

மட்டக்களப்பு நகரில் நேற்று சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண்னொருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முற்பகல் 11.00மணியளவில் மகாஜனக்கல்லூரிக்கு அருகில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த பெண்னொருவர் வீதியில் முச்சக்கர வண்டியில் மோதியதனால் இந்த விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.