மட்டக்களப்பு மாநகரசபையின் அனுசரணையுடன் நாவற்குடா பொதுசுகாதார பரிசோதகரின் தலைமையில் நாவற்குடா பொதுமயான சிரமதானம் இன்று நடைபெற்றது.
இதில் கிராமசேவை உத்தியோகத்தர், மாநகரசபை மேற்பார்வையாளர், கிராம அபிவிருத்தி உறுப்பினர்கள் சுகாதாரதொழிலாளர்கள், என இருபத்தைந்துபேர் கொண்ட குழு இச்சிரமதான பணியில் கலந்துகொண்டனர்.
அண்மைக்காலமாக மாநகரசபையினரின் சிரமதானப்பணி பல இடங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.