இருட்டுச் சோலை மடு விஸ்ணு வித்தியாலயத்தில் இரண்டு பேர் சித்தி


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள இருட்டுச் சோலை மடு விஸ்ணு வித்தியாலயத்தில் இவ்வருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் செல்வன் ஸ்ரீகாந் டிலக்சன் 167 புள்ளிகளையும், செல்வி யோகானந்தம்  ரேகா 162 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தற்போது அதிபராக பி.ஏகாம்பரதாசன் கடமையாற்றி வருகிறார். புலமைப்பரிசில் கற்பித்தலை ஆசிரியர் வி.சந்திரசேகரம் மேற்கொண்டு வருகிறார்.

இப்பாடசாலையில் 100 புள்ளிகளுக்கு மேல் 8பேரும் 70 புள்ளிகளுக்கு மேல் 6 மாணவர்களும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.