புதுக்குடியிருப்பு மயானத்தில் பிரபல கணித ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பொதுமாயனத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரபல கணித ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிரான்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் புதுக்குடியிருப்பினை கணபதிப்பிள்ளை சிவநேசன் (48வயது)என்னும் ஆசிரியரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் ஆசிரியர் காணமல்போனநிலையில் குடும்பத்தினர் தேடிவந்ததாகவும் இந்த நிலையில் இன்று காலை சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடித்ததாகவும் உறவினர்கள் தெரித்தனர்.

நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.