(துசி)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200வது அண்டு சிறப்பு நிகழ்வின் ஒரு அம்சமான கல்லுர்ரி தின கொண்டாட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருக்கின்றது.
இது தொடர்பில் பத்திரிகையாளர்களுக்கு தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவர் செயலாளர் இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் பாஸ்கரன் அவர்கள்.
இலங்கையில் முதன் முதலாக 200 ஆண்டு நிறைவினை கொண்டாடும் முதல் பாடசாலையாக எமது மட்டுநகர் மெதடிஸ்த மத்திய கல்லூரி அமைகின்றது என்பமு எமது மட்டக்களப்பிற்கே உரித்தான சிறப்பு இந்த 200வது அண்டு நிறைவினை கொண்டாடம் முகமாக பாடசாலை நிர்வாகத்துடன் எமது பழைய மாணவர் ஒன்றியமும் இணைந்து 200 நிகழ்சிகளை மேற்கொள்ள திட்டம் மேற்கொண்டுள்ளோம் அந்த வகையில் எதிர்வரும் 29ம் திகதி எமது பாடசாலையில் கல்லூரி தினம் கொண்டாடப்படவிருக்கின்றது.
இது ஒரு வரலாறு காணாத நிகழ்வாக அமையவிருக்கின்றது இதற்கு ஊடகவியலாளர்களாகிய தங்கள் ஒத்துழைப்பு தேவை. இந்நிகழ்வினை எவ்வித இடையூறுகளுமின்றி சிறப்புற நடாத்துவதற்கு ஊடகவியலாளர்களுடன் சிறு கலந்தாலோசனை மேற்கொள்ளவே இந்த சந்திப்பினை நாம் மேற்கொண்டோம் என்றார்.
அத்துடன் பாடசாலை மாணவர்களின் கல்வித்த தரம் பற்றி பாடசாலை அதிபரிடம் வினவியபோது பாடசாலை அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
எமது மாவட்டத்தைப் பொருத்த மட்டில் சிறுவர்களின் கல்வித்த தரம் முன்பு 85 காலப்பகுதிகளில் இருந்தததை விட தற்போது மிகவும் மந்தமாகவே காணப்படுகின்றது நான் இந்த பாடசாலைக்கு பழையவன் 85 தொடக்கம் 93 காலப்பகுதிகளில் நான் இந்தப் பாடசாலையில் கடமையாற்றினேன்.
இந்த பாடசாலையின் கண்ணியமும் பழமையும் தெரிந்த ஒருவன் என்ற ரீதியில் தான் நான் இந்த பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டேன் எமது பாடசாலையின் கல்வித் தரத்தினை முன்பு இருந்ததைப் போல் கொண்டுவருவதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன்.
ஆத்துடன் பாடசாலை மாணவர்கள் உட்பட ஆசிரிஜயர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோருக்கும் பாடசாலை கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பது தொடர்பில் சில சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள தீர்மானித்திருக்கின்றேன் என்றார்.
மேலும் இப்பாடசாலையின் 200வது அண்டு சிறப்பு நிகழ்வுகள் அனைத்தும் சிறப்புற நடாத்தவதற்கு நாம் எண்ணியுள்ளோம் அந்தவகையில் எமத ஊடகவியலாளர்களின் உதவி எமக்கு தேவை என்றார்.