அதிவேகமாக பயணிக்கும் டிப்பர்(ஆளடியன்) - பொது மக்கள் மிகவும் பாதிப்பு


( வி.சுகிர்தகுமார் )

அக்கரைப்பற்று சாகாம வீதியில் அதிவேகமாக பயணிக்கும் டிப்பர்(ஆளடியன்) வாகனங்களினால் பொது மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிவருவதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரத்தில் இவ்வாறு வேகமாக வேகமாக பயணித்த டிப்பர் வாகனங்களினால் இரு ஆட்டோ வாகனங்கள் தாக்கப்பட்டு சேதத்துக்குள்ளாக்கப்பட்ட போதும் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். இவர்கள் வேறு வாகனங்களுக்கு வழிவிடுவதில்லை என்பதுடன் வாகனங்களுக்கெல்லாம் ராஜா என்ற நினைப்பில் வீதியில் செல்வதாகவும் ஏனைய சாரதிகள் குறிப்பிடுகின்றனர். வாகன நெருசல் மிக்க இப்பாதையில் இவர்களுi;டய வேகத்தினை கட்டுப்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.