மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனையில் கட்டுத்துவக்கு வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஏறாவூர் பொலிஸார் இவரை கைதுசெய்து விசாரணை செய்தபோது குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 17ஆம் திகதி வரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்;டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த காலத்தில் ஏதேனும் குற்றச்செயல்களுக்கு இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.