தென் கிழக்கு சமூக இஸ்லாமிய அறிஞர் கௌரவிப்பு

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

தென் கிழக்கு சமூகம் இஸ்லாமிய அறிஞரும் , இலங்கையின் தலை சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளரும் , ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளருமான கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களுக்கு கௌரவம் வழங்கும் வகையில் ஒழுங்கு செய்திருந்த கௌரவிப்பு விழா நேற்று இரவு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

கலாநிதி மௌலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ்  கலாநிதி எம்.ஏ. எம்.சுக்ரி பற்றிய அறிமுக உரையினையும் , அஸ்-ஸெய்க் எப்.எம்.ஏ.அன்சார் மௌலானா வரவேற்புரையையும், விரிவுரையாளர் அஸ்– ஸெய்க் எம்.எச்.எம்.ஜெலீல் அரபு மொழி வாழ்த்துப்பாவினையும் , எம்.எம்.அஸ்லம் சஜா ஆசிரியர் தமிழ் வாழ்த்துப் பாவினையும் பிரதம அதிதி கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி ஏற்புரையையும் புனர்வாழ்வு அமைச்சின் மேலதிக செயலாளர் அஸ்– ஸெய்க எம்.ஐ.அமீர் நன்றியுரையினையும் நிகழ்த்தினார்கள்.

தென்கிழக்கு அமைப்பின் சார்பாக கலாநிதி மௌலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் , புனர்வாழ்வு அமைச்சின் மேலதிக செயலாளர் அஸ் –ஸெய்க் எம்.ஐ.அமீர் , எப்.எம்.ஏ. அன்சார் மௌலானா ஆகியோரும் , அம்பாறை மாவட்ட உலமா சபையின் சார்பாக அஸ்-ஸெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி அவர்களும் , அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் சார்பில் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் அவர்களும் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியை வாழ்த்தி வாழ்த்து மடல்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டது.

விரிவுரையாளர் .எல்.வஸீல் , சட்டத்தரணி அஸ்-ஸெய்க்; என்.எம்.முஜீப் , அஸ்-ஸெய்க் சுஹைர் காரியப்பர் ஆகியோர் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் , ஜாமியா நளீய்மியா பழைய மாணவர்களும் , பிரதேச உலமாக்களும் , பாடசாலை அதிபர்களும் , கல்வியாளர்களும் , பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் , கல்வியல் கல்லூரி விரிவுரையாளர்களும். பிரதேச செயலாளர்களும் , வர்த்தக பிரமுகர்களும் , எழுத்தாளர்களும் , ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.