மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 2012ஆம் ஆண்டில் பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் , கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் , இன்று மத்திய கல்லூரியின் அதிபர் ஐ .கமலராஜா தலைமையில் இக் கல்லூரியின் பழையமாணவ சங்க உறுப்பினர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது .
இப் பாடசாலையானது 2014ஆம் ஆண்டு தனது 200வது வருடத்தை நிறைவு செய்யும் இலங்கையின் முதலாவது பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது .
இன் நிகழ்வுக்கு விசேட அதிதிகளாக வருகை தந்த இக் கல்லூரியில் கற்று உயர் நிலை பதவிகளை வகிக்கும் பழையமாணவர்களான ,கிழக்கு பல்கலை கழக விரிவுரையாளரும், மட்டக்களப்பு போதன வைத்தியசாலை வைத்திய கலாநிதி ஆர் .ராஜவர்மண் , கட்டிட பொறியியலாளர் தமிழ்வாணன் , கல்குடா வலயக்கல்வி கணக்காய்வாளர் டி சபேசன் , மற்றும் அம்கோர் நிறுவன தலைமை அதிகாரியும், பழைய மாணவ சங்க பிரதி தலைவருமான ப . முரளிதரன், பொறியியலாளரும் , பழைய மாணவ சங்க பொது செயலாளரும் , டெலிகாம் பிராந்திய முகமையாளருமான வை .கோபிநாத் அவர்களும் கலந்துகொண்டனர் .
இவர்கள் மாணவர்களால் மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு , மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது .
இந் நிகழ்வில் தலைமை உரை ஆற்றிய கல்லூரி அதிபர் ஐ . கமலராஜா அவர்கள் 2014 ஆம் ஆண்டு பல்கலைக் கழக அனுமதியை எதிர் பார்த்திருக்கும் மாணவர்களின் கல்வியின் முக்கியத்தையும் அதற்கு பெற்றோரின் பங்களிப்பும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை எடுத்துரைத்தார் .
அதே போன்று நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அதிதிகளும் உரைகளிலே தாங்கள் இக் கல்லூரியில் கற்ற விதம் , தாங்கள் இந்த உயர் நிலைக்கு வர காரணமாக இருந்த ஆசிரியர்கள் , தங்களது பெற்றோரின் பங்களிப்பு , தாங்கள் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம் பற்றிய நீண்ட விளக்கங்களை மாணவர்களுக்கு கூறியதோடு, இக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தங்களது கல்விக்குரிய முழுமையான பங்களிப்பை தருவதாக கூறிக்கொண்டார்கள் .
இந் நிகழ்வில் பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் , இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் மற்றும் 2014ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களும் கலந்துகொண்டனர் .
இறுதி நிகழ்வாக 2014ஆம் ஆண்டு க .பொ .த உயர் தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு பொறியியலாளர் வை . கோபிநாத் தலைமையில் இடம்பெற்றது .









