(தவக்குமார்)
படுவான்கரைப் பிரதேசத்தின் மண்டுர் கிராமத்தில் இருவேறுபட்ட இடத்தில் இறைவனுக்கு நேர்த்தியாக வைக்கப்பட்ட வழை மரம் மற்றும் தென்னை மரம் என்பன இயற்கைக்கு மாறான விதத்தில் வளர்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வாழை மரத்தின் தண்டுப்பகுதியில் குலை இட்டுள்ளதுடன் சிறிய தென்னம் கண்று வளர்ச்சியை அடைய முன்பே பாளையுடன் காய்த்திருப்பதை காண முடிகின்றது.
இதனை அக்கிராம மக்கள் அதிசயமாக நம்புவதுடன் அதனை தினமும் பார்வையிட்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.