பைற்றர் மீன் சிக்குவதால் மீன்பிடியில் சிரமத்தினை எதிர்கொள்ளும் ஈரளக்குளம் மீனவர்கள்

மட்டக்களப்பு,செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளத்தில் மீன் பிடியில் ஈடுபட்டுள்ள உள்ளுர் மீனவர்களின் வலைகளில் அதிகளவிலான பைற்றர் ரக மீன்கள் சிக்குவதால் மீன்பிடியில் தாங்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவித்தனர்.

உண்பதற்கு உகந்ததற்ற மேற்படி பைற்றர் மீனினமானது மிகவும் அதிகளவிலே வலைகளில் படுவதால் ஏனைய மீன்கள் பிடிபடுவது குறைவான நிலையிலேயே உள்ளதாகவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் ஆராய பிரதேச செயலாளர் உதயசிறிதர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கங்காதரன் ஆகியோர் குளத்திற்கு சென்று மீனவர்களுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் பைற்றர் தொல்லையிலிருந்து மீனவர்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் உறுதியளித்தனர்.