புன்னைச்சோலை பாலர் பாடசாலை தமிழ்த்தின விழா

(எ .லியோன் ராஜ் )  

புன்னைச்சோலை  பாலர்  பாடசாலை  சிறார்களின்  தமிழ்த்  தின  விழா  நேற்று செவ்வாய்க்கிழமை காலை  10.00 மணிக்கு  புன்னைச்சோலை  கலாசார  மண்டபத்தில்  இடம்  பெற்றது .

இவ்  விழாவுக்கு  வருகை  தந்த  அதிதிகளை  இப்  பாடசாலை  பழைய  மாணவர்கள்  நடனமாடி  அழைத்து  வந்தனர். அதன்  பின்  குத்துவிளக்கேற்றி  விழா  ஆரம்பமாகியது .

இவ்  விழாவுக்கு  பிரதம  விருந்தினர்களாக  மட்டக்களப்பு  அமிர்தகழி  ஸ்ரீ  சித்தி விநாயகர்  மஹா  வித்தியாலய  அதிபர்  திருமதி .என் .தர்மசீலன், மட்டக்களப்பு  ஆதவன்  அச்சக  உரிமையாளர் சமாதான  நீதிவான்  கலாநிதி  வை . வீரசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர் .

கௌரவ  விருந்தினர்களாக பட்டிருப்பு  தேசிய பாடசாலை  பிரதி  அதிபர் கே .தம்பிராஜா,புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி  அம்மன்  ஆலய பிரதம  பூசகர்  அ . மனோகரன், புன்னைச்சோலை  பாலர் பாடசாலை  அபிவிருத்திக் குழு  முகாமையாளர்  ஆர் .ரெட்னேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இத்  தமிழ்த்  தினா  விழாவுக்கு  மத்தியஸ்தர்களாக  அமிர்தகழி  ஸ்ரீ  சித்தி  விநாயகர்  மகா  வித்தியாலய  ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர்.

இவ் விழா நிகழ்வுகளில்   மழலை  குரல்களால்  பாடல்களை  பாடிய   சிறார்களையும்  , தமது  நடன அசைவுகளால் நடனம் ஆடிய  சிறார்களையும் ,இவர்களை  பயிற்று  வித்த  ஆசிரியர்களையும்   இந்நிகழ்வுக்கு வருகை  தந்த  அதிதிகள்  பாராட்டியதோடு , தமது  உரைகளிலே  இச்  சிறார்களை  நல்ல  ஒழுக்கத்தோடு , நமது  கலாச்சாரத்தோடு  நல்ல மாணவர்களாக, நட்  பிரஜைகளாக வளர  வேண்டும்  என கேட்டுக்கொண்டு  சிறார்களுக்கு  பரிசில்களையும் வழங்கி  வைத்தனர்.

இறுதியாக  இப்  பாடசாலை  பழைய  மாணவர்களின்  நடன  நிகழ்வோடு  விழா  இனிதாக  நிறைவு  பெற்றது .