கல்முனை நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மூத்தோருக்கான கிறிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி சனி ஞாயிறு ஆகிய இருதினங்கள் நடைபெற்றது.
இதில் நற்பட்டிமுனையில் உள்ள மூத்த விளையாட்டு வீரர்களை ஐந்து கழகமாக பிரிக்கப்பட்டு அதற்கான அனுசரணையாளர்களும் தெரிவுசெய்யப்பட்டு இறுதிப்போட்டி ஞயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் நிலா சுப்பர் கிங் ,ரகன் ரைடர் ஆகிய அணிகளுக்கு இடையில் இறுதிப் போட்டி இடம்பெற்று இதில் நிலா சுப்பர் கிங் சம்பியனான தெரிவாகியுள்ளது.







