திருத்தப்பணியால் மட்டக்களப்பில் 17 இடங்களில் நாளை மின்வெட்டு

திருத்தப் பணிகள் காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரையும் மட்டக்களப்பு மாவட்டத்தின் 17 இடங்களில் 9 மணிநேர மின்துண்டிப்பு இடம்பெறவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஏறாவூர், புன்னைக்குடா வீதி,  ஐயங்கேணி, மிச்சி நகர், தளவாய், மீராங்கேணி, சதாம் ஹ{சைன் கிராமம், ஹிஸ்புல்லா கிராமம், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, ஊறணி மற்றும் திருப்பெருந்துறை ஆகிய இடங்களில் இந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.