அருட்தந்தை இக்னேஸ் ஜோசப் அடிகளாரின் குருத்துவ பணி வாழ்வின் வெள்ளிவிழா நிகழ்வு

(எ . லியோன்  ராஜ் )

மட்டக்களப்பு  மாமாங்கம்  சகாயபுரம் பங்கு  அருட்தந்தை  இக்னேஸ் ஜோசப் அடிகளார்  தமது  குருத்துவ  பணி வாழ்வில் 25ஆண்டுகள்  நிறைவு  செய்து,  வெள்ளி  விழாவை  தமது  பங்கு  மக்களுடன்  இன்று  28.07.2013 வெள்ளி  விழா  விசேட  திருப்பலியுடன்  சிறப்பாக  கொண்டாடினார் .

அருட்தந்தை  இக்னேஸ்  ஜோசப்  அவர்கள்  சொறிக்கல்முனையைச்  சேர்ந்த  அருளன்  இன்னாசி -செபமாலை  தம்பதிகளின்  புதல்வர்  ஆவார் .

தமது  ஆரம்பக்  கல்வியை சொறிக்கல்முனை  திருச்சிலுவை றோமன்  கத்தோலிக்க  பாடசாலை  மற்றும்  கல்முனை கார்மேல்  பாத்திமா  கல்லூரியிலும் பெற்றுக்  கொண்டார் .

குருத்துவ  நிலைக்கான  மெய்யியல்  மற்றும் இறையியல்  கற்கை  நெறிகளை  தமிழ்நாட்டில்  திருச்சிராப்பள்ளி  தூய  பவுல்  குருமடத்தில்  1981 - 1988 நிறைவு செய்தார்.

சிறப்பு  பயிற்சிகளாக  சென்னையில்  "இளையோர்  ஆற்றுப்படுத்தல் " பயிற்சியும் , பெங்களூரில்  மறைக்கல்வி  மற்றும்  குடும்ப  ஆன்மீகம் பற்றிய  பயிற்சி  நெறிகளையும்  நிறைவு  செய்தார் .

ஆயித்தியமலை ,வந்தாறுமுலை , செங்கலடி , இருதயபுரம் , புளியந்தீவு  போன்ற  பணித்தலங்களில்  பயிற்சி  பெற்று , 1988ஆம் ஆண்டு மே  மாதம்  15ஆம்  திகதி  தூய  மரியாள்  இணைப்பேராலயத்தில்  "தியாக்கோனாக " உயர்த்தப்பட்டார் .

1988ஆம்  ஆண்டு ஆடி  மாதம் 28ஆம்  திகதி  சொறிக்கல்முனை திருச்சிலுவை  ஆலயத்தில்  ஆயர்  கிங்;ஸ்லி  சுவாம்பிள்ளை  ஆண்டகையால்  குருவாக  திருநிலைப்படுத்தப்பட்டு  தனது  முதல்  திருப்பலியை  சொறிக்கல்முனை  ஆலயத்தில்  ஆடி  29ஆம்  திகதி  ஒப்புக்கொடுத்தார் .

புளியந்தீவு  இணைப்பேராலயத்தில்  உதவிப்பங்குத்தந்தையாக  15.08.1988-15.05.1991 வரை  பனியாற்றினார் . 1991 -1995 வரை  பெரிய  கல்லாறு  ஆலயத்திலும்  1995 -1999 வரை  கல்முனை ஆலயத்திலும் , 1999 -2006 வரை  புளியந்தீவு  இணைப்பேராலயத்திலும் , 2006 -2012 வரை  தாண்டவன்வெளி  பங்கிலும்  பனியாற்றினார் . தற்போது  2012 சகாயபுர  பணித்தளத்தில்   பணிபுரிந்து  வருகிறார் .