ஓந்தாச்சிமடம் ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு உற்சவம்

ஓந்தாச்சிமடம் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று காலை இடம்பெற்ற தீமிதிப்புடன் நிறைவுபெற்றது.

கடந்த ஐந்து தினங்களாக இடம்பெற்றுவந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று நிறைவுபெற்றது.

நேற்று செவ்வாய்கிழமை ( 16.07.2013) சக்கி யாகம், நோர்ப்புக்கட்டுதல் மற்றும் கடல்நீராடல் என்பன நடைபெற்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை ( 09.07.2013) ஆரம்பமான உற்சவத்தில் தினமும் சமயச்சொற்பொழிவுகள் இடம்பெற்றன.

இலங்கையின் எல்லாப் பாகங்களிலிருந்தும் சிறுவர்கள், பெரியோர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு கற்பூரச்சட்டியேந்தி தீமிதிப்பில் ஈடுபட்டனர்.