அவுஸ்திரேலிய கடலில் 170 பேருடன் சென்ற படகு மூழ்கியது!- 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம்(PHOTOS)

அவுஸ்திரேலிய இந்தோனேசிய கடற்பரப்பில் நேற்று இரவு இலங்கை அகதிகள் உள்ளிட்ட படகு ஒன்று மூழ்கியுள்ளது.

இந்த படகு மூழ்கும் போது அதில் 170 பேர் இருந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் இலங்கையர்களும் ஈரானியர்களாகும் என்று அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி இதுவரை குழந்தைகள் பெண்கள் உட்பட்ட 60 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை வெளியான தகவலின்படி இரு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

120 பேர்வரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். புடகில் ஏற்பட்ட இயந்திரகோளாறே விபத்துக்கான காரணம் என்று அறியப்படுகிறது.

இதேவேளை மேலும் 60 பேரைக் கொண்ட படகு ஒன்று நேற்று கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளது.