ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் பெற்றோரின் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயம்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்,மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்,பட்டிருப்பு கல்வி வலயம்,கல்குடா கல்வி வலயம் ஆகியவற்றில் உள்ள பாடசாலைகளில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றது.

இன்றைய தினம் மாணவர்கள் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்து பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் சுமுகமான முறையில் பரீட்சைகள் நடைபெற்றன.

பரீட்சை நிலையங்களுக்கு முன்பாக பெற்றோர் பெரும் எதிர்பார்ப்புடன் நின்றுகொண்டிருப்பதை காணமுடிந்தது.