பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதான வளவாளராக விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மோகனகுமார் கலந்து கொண்டு செயலமர்வை வழிநடத்தினார்.
இச்செயலமர்வின் போது, பணிச்சுமை காரணமாக உருவாகும் மன அழுத்தங்களை எவ்வாறு சமாளிப்பது, மனநலத்தை பேணுவதன் முக்கியத்துவம், தொழில்சார் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சமநிலையை பேணும் வழிமுறைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் விளக்கமளிக்கப்பட்டன.
மேலும், உள நெருக்கீட்டை குறைக்கும் நடைமுறை வழிமுறைகள், தன்னம்பிக்கை வளர்த்தல் மற்றும் நேர்மறை சிந்தனையின் அவசியம் குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு பயனுள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன.




