நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் அதிகூடிய 180 புள்ளிகளை செல்வன் யோகேஸ்வரராஜா பிரணவ் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறிப்பாக சாதனை மாணவன் யோகேஸ்வரராஜா பிரணவ்வின் தந்தையார் யோகேஸ்வரராஜாஅன்று தான் கற்கும்போது இதே தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 180 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் கிழக்கின் மூத்த நிர்வாக சேவை அதிகாரி முதலாவது காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ராமகிருஷ்ணனின் பேரனாவார்.
