சித்தாண்டி முருகனுக்கு வருடாந்த மகோற்சவம்

கிழக்கிலங்கையில் சிகண்டி முனிவரினால் பூசிக்கப்பட்ட வேலுடை மட்டக்களப்பு சித்தாண்டிபதி அருள்மிகு வள்ளி குஞ்சரி சமேத ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஸ்hன வருடாந்த மகோற்சவம் எதிர்வரும்  23ம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

மரபுரீதியான குடியுரிடையுடைய தேவஸ்தான மகோற்சவம் தொடர்ந்து 16 நாட்கள் நடைபெறும் மகோற்சவத்தில் 04.09.2025 வியாழக்கிழமை 05.09.2025 வெள்ளிக்கிழமை மற்றும் 06.09.2025 சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மயில்கட்டு விசேட உற்சவம் நடைபெற்று மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு சித்தாண்டி 4, உதயன்மூலையில் அமைந்துள்ள பிரணவ தீர்த்தக்குளத்தில் சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி மாகோற்சவம் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்து அன்று மாலை 5.00 மணிக்கு கொடியிறக்கத்துடன் இவ்வருடத்திற்கான மகோற்சவ பெருவிழா நிறைவடையவுள்ளது.