சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550 கிலோகிராம் மாட்டிறைச்சி இன்று திங்கட்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தில், இன்று மாலை உரிய பாதுகாப்பு அல்லது சுகாதார வசதிகள் இன்றி இந்த மாட்டிறைச்சி கடத்தப்பட்டுள்ளது.
குறித்த இறைச்சி வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் பேருந்திலிருந்து இறக்கப்பட்டு, முச்சக்கரவண்டியில் மாற்றி ஏற்றிச் செல்லப்படவிருந்தது.
இது தொடர்பாக பொதுமக்களால் வவுனியா மாநகரசபைக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாநகரசபையின் பிரதி முதல்வர் ப. கார்த்தீபன் மற்றும் உறுப்பினர் அருணன் ஆகியோரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட இறைச்சியின் மொத்த நிறை சுமார் 550 கிலோகிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.