வவுனியாவில் ரயிலில் மோதிய மோட்டார் சைக்கிள்



வவுனியா ஓமந்தை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலில் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதில் தாய், மகள் என இருவர் படுகாயமடைந்த நிலையில்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற காரணத்தினால் ரயில் அரை மணிநேரம் தாமதமாகவே கொழும்பு நோக்கிப் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.