100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து



 லிந்துலை ஊவாக்கலை பகுதியில் இன்று (29) அதிகாலை முச்சக்கவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

 குறித்த சம்பவத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். 

ஊவாக்கலையிலிருந்து, மெரயா நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக லிந்துலை பொலிஸார்; தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.