கிழக்கு மாகாண மல்யுத்த போட்டியில் தொடர்ச்சியாக இந்த வருடமும் மட்டக்களப்பு சான்டோ சங்கரதாஸ் அணி சாம்பியன் ஆனது !!!

மட்டக்களப்பு வேபர் மைதானத்திலே உள்ளக அரங்கிலே  நேற்றைய தினம் (8/6/2025)நடைபெற்ற மாகாண  மட்ட மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து வீர வீராங்கனைகள் பங்கு கொண்டனர் மட்டக்களப்பு மல்யுத்த ஆண்கள் அணியினர் 9 தங்கப்பதக்கங்களையும்  8 வெள்ளிப் பதக்கங்களையும் 1 வெண்கல பதக்கங்களையும் பெற்று கிழக்கு மாகாண சாம்பியன்னாக     தெரிவு செய்யப்பட்டார்கள். 

பெண்கள் மல்யுத்த அணியினர் மூன்று தங்கம் மூன்று வெள்ளி பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்  குறிப்பாக மட்டக்களப்பு மல்யுத்த ஆண்கள் அணியினர் 1993 தொடக்கம்2025 வரை 32 வருடமாக தொடர்ச்சியாக கிழக்கு மாகாண சாம்பியன் அணியாக மட்டக்களப்பு சான்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகம் மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்து வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.