சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பாடசாலையால் உணவு ஒப்பந்தக்காரர் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை உற்கொண்ட மாணவர்களில் 22 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரடியனாறு இந்து வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களில்
வாந்திபேதி , வயிற்றுவலி என்பன ஏற்பட்டதன் காரணமாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று உணவு மாதிரிகளை பரிசோதித்து வருகின்றனர்.
மேலும் உணவு ஒப்பந்தக்காரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துவருகின்றனர்.
கடந்த மாதம் கரடியனாறு பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமையினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.