ஆசிய அபிவிருத்த வங்கியின் நிதி அனுசரனையுடாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் அஸ்வசும பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அஸ்வசும பயனாளிகளின் வாழ்வாதார
பொருத்தத்தை அடையாளம் காண்பதற்கான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டது.
மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு, தென் எருவில்பற்று, கோறளைப்பற்று மேற்கு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தயோகத்தர்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
இதன் போது கருத்து தெரிவித்த மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அஸ்வசும பயனாளிகளுக்கு பொருத்தமான வாழ்வாதார திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு உத்தியோகத்தர்கள் அர்பணிப்புடன் செயற்ப்பட வேண்டும் என தெரிவித்தார்.