அமைச்சராக பதவி ஏற்றதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முதல் தடவையாக(27) அன்று விஜயத்தினை மேற்கொண்டார். மேலும் கடற்றொழில் அவர் மீனவர்களின் குறை நிறைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையின் தீர்வினை மிக விரைவாக பெற்றுத் தருவதாகவும், சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதாகவும் அதன் போது தெரிவித்தார்;.இவ்வாறு பல சட்டவிரோதமான செயற்பாடுகளை கட்டுப்படுத்தி கடல் வளத்தை குன்றாமல் பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் போரிலேயே அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மீனவர்களுடனான குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
ஆற்றினை ஆளப்படுத்துதல், களப்பு இறங்குதுறை அமைத்தல், புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கூடிய அளவிலான மீன் பிடி வசதிகளை ஏற்படுத்தவும், சட்டவிரோத மீன்பிடி வலைகளை தடுக்கும் முகமாகவும் பல கோரிக்கைகளும், ஆள் கடல் மீன் பிடி தொடர்பாகவும் இதன் போது மீனவர்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீர்யல்வள உதவி பணிப்பாளர் றுக்சான் குரூஸ், மற்றும் கடற் தொழிலாளர்கள், மீனவர் சங்கத் தலைவர்கள் என பலர் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.