ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்து சென்றமைக்கான செலவீனம் மற்றும் கடந்த 2024ஆம் ஆண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு ரணில் விக்ரமசிங்க வருகை தந்து சென்றமைக்கான செலவீனம் தொடர்பிலும் மாவட்ட செயலகத்தின் ஊடாக 5 ஆம் திகதி தகவல் கோரப்பட்டது.
தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக கடந்த 17 .02. 2025 அன்று தகவல் கிடைத்தமைக்கான ஆவணம் வழங்கப்பட்டது.இந்நிலையில் நேற்று ஜனாதிபதியின் யாழ்பாணம் விஜயம் தொடர்பான தகவல் ஜனாபதியின் பாதுகாப்பினை நேரடியாக பாதிக்கும் என்ற காரணத்தினால் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 5(1)(ஆ) (1)பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய குறித்த தகவல்களை வழங்கமுடியாது என குறிப்பிட்டு மேன்முறையீடு மேற்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம் 5(1)(அ)(1) கீழ் ஜனாதிபதியின் யாழ். வருகையின் செலவீனத்தை நிராகரித்தது.ஆனால் குறிப்பிட்ட பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள அரசின் ஆட்புலத்தையோ, இறைமையையோ, பாதுகாப்பையோ வருகைக்கான செலவீனம் கேள்விக்குட்படுத்தவில்லை. மக்களின் பொது நிதியே பயன்படுத்தப்பட்டுள்ளது.மேலும், மேற்குறித்த விடயங்கள் கேள்விக்குட்படுத்தினால் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவீனம் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லையா? ஆகவே வெளிநாட்டு செலவீனம் தொடர்பில் தெரிவிக்கின்ற பொழுதும் உள்நாட்டு சுற்றுப்பயணத்தில் பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளனவா என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அரசாங்கம் தகவல் அறியும் உரிமையினை தொடர்ந்து இழுத்தடித்து வழங்க முற்படுகின்றதா என சந்தேகம் எழுவதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.