35ஆம் கிராமத்தில் மரணவீட்டுக்கு சென்றுவிட்டு குருமண்வெளி கிராமத்திற்கு திரும்பிச்சென்றுகொண்டிருக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது குறித்த காரில் பயணித்த கணவன், மனைவி குழந்தைகள் உட்பட 5பேர் இருந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.