தூய்மையான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் சிறிலங்கா திட்டமானது பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கொண்டுசெல்லும் செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இன்று காலை கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாரிய சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்துக்கல்லூரியின் அதிபர் கே.பகீரதன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த சிரமதான பணியில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
பாடசாலை சமூகம்,பாடசாலையின் சுற்றாடல் முன்னோடிக்குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாடசாலையின் வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக இருந்த பகுதிகளும் இனங்காணப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.
அத்துடன் பாடசாலையினை சூழவுள்ள பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் கழிவுப்பொருட்களும் சுற்றுச்சூழலில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களும் அகற்றப்பட்டன.
அத்துடன் இயற்கையினை பாதுகாப்போம் என்னும் வகையிலான செயற்பாடுகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.