பூட்டப்பட்ட வீட்டினுள் இருந்து பழுதடைந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி மலைமகள் வீதியிலுள்ள  வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

ஏறாவூர் மிச்நகர் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வரும் இவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பிணவாடை வந்ததை அறிந்த அயலவர்கள் பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து ஸ்தலத்தலத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் சொகோ தடயவியல் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.