தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் எம்.பி.அரியநேத்திரன் அறிவிப்பு


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கிஸ்;தருமான பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.தந்தை செல்வா கலையரங்கில் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது.

தந்தை செல்வா கலையரங்கில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானம்  அறிவிக்கப்பட்டது.

7 தமிழ் கட்சிகளும் 7 சிவில் அமைப்புக்களும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஊடாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பொதுவேட்பாளராக களமிறங்குவதற்காக தவராசா மற்றும் பா. அரியநேத்திரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.  இந்த நிலையிலேயே பா.அரியநேத்திரனை பொது வேட்பாளராக களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சி எந்த அறிவிப்பினையும் இதுவரையில் வெளியிடாத நிலையில் அக்கட்சியின் முக்கிஸ்தரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.