உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு செயல்திட்டங்கள்!!

 


உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள ஈச்சந்தீவு ராமகிருஷ்ண மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் மட்டக்களப்பு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் கே.எச்.எஸ்.எம். தர்மதாச தலைமையில் (05) திகதி இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.
"சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைக் காப்போம்"எனும் தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன் போது சுற்றாடல் முன்னோடி மற்றும் சிறவர் சுற்றாடல் கழக மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது.
மட்/மமே /ஈச்சந்தீவு இ.கி.மி தமிழ் வித்தியாலயம், மட்/மமே /நாவற்காடு கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் மட்/மமே /கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலய மாணவ மாணவிகளின் கண்கவர் ஆக்கங்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தது.
மேலும் பாடசாலை வளாகத்தினுள் மாதிரி பச்சை வீட்டு தொகுதி திறந்து வைக்கப்பட்டதுடன் பல பகையான தாவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி. என்.சத்தியானந்தி, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர் (திட்டமிடல்) வை.சி.சஜீவன், உதவிப்பணிப்பாளர் க.ரகுகரன், மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் என்.குகதாசன், ஆசிரிய ஆலோசகர் என்.ஜெயகரன், அதிபர்கள், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி அன்ட் ஜோதிலட்சுமி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் திருமதி.ஜீ. ஶ்ரீவித்தியன் சுற்றாடல் அதிகாரசபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்விற்கான நிதிப்பங்களிப்பை சோலார் யுனிவர்ஸ் (Solar Universe) மற்றும் சூரிய சக்தி Sooryashakthy (Pvt ) Ltd வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.