காத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இரண்டு பேர் காயம்: வாகனமும் சேதம்


காத்தான்குடி பிரதான வீதியில் இன்று(23) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன் வாகனமும் சேதமடைந்துள்ளது.

கல்முனையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பொலனறுவையில் இருந்து கல்முனைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த வேன் காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதான வீதியில் பெரிய  பூச்சாடி ஒன்றில் மோதுண்டு இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதில் வேனின் சாரதியுமா அதில் பயணித்த இருந்த சிறு பிள்ளை ஒருவரும் சிறிய காயத்துக்குள் ளாகியுள்ளனர்.

வேனின் முன்பகுதி முற்றாக சேதம் அடைந்துள்ளதுடன் பூச்சட்டியும் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் காத்தானகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலீஸ் நிலைய போக்குவரத்து பொலீசார் மேற்கொண்டுள்ளனர்.