செங்கலடியில் பாரிய பஸ் விபத்து –நான்கு பேர் படுகாயம்

கல்முனையிலிருந்து மஹரகம நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று (06)அதிகாலை செங்கலடி பகுதியில் பாரிய விபத்தில் சிக்கியதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை கல்முனையிலிருந்து மஹரகவுக்கு சென்ற பஸ் செங்கலடி சந்தியில் கட்டுப்பாட்டை இழந்து கடைகளை உடைத்துச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பஸ்சின் சாரதி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்து செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.