கடந்த ஏப்ரல் மாதம் 2ம் திகதி ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் வளர்த்து வரும் இரு மாடுகளும் வழமைபோல வீட்டில் இருந்து வெளியே மேச்சலுக்கு சென்றுள்ள நிலையில் இரு மாடுகளையும் இருவர் திருடிச்சென்றுள்ள நிலையில் ஒருவரை கைது செய்ததுடன் ஒருவர் தலைமறைவாகிய வந்த அவனை சம்பவதினமான நேற்று இருவு கைது செய்தனர்.
அதேவேளை காத்தான்குடியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 11ம் திகதி வீட்டை உடைத்து அங்கிருந்த வெளிநாட்டுபணமான 7 ஆயிரத்து 500 றியால், ஜபோன், இலங்கை பணம் உட்பட 8 இலச்சத்து 94 ஆயிரத்து 400 ரூபா பெறுமதியானவைகள திருட்டுப் போயிருந்தது.
இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் திருடப்பட்ட பணம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.