இலங்கை தேசிய கபடி அணிக்கு தெரிவாகி சர்வதேச போட்டியில் பங்கேற்கும் மட்டக்களப்பு வீராங்கனைகள்


நேபாளத்தில் நடைபெறும் கபடி போட்டியில் இலங்கை தேசிய அணியில் மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தை சேர்ந்த 3  வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர்.எதிர்வரும் நாட்களில் நேபாளத்தில் நடைபெறவுள்ள கபடி போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை தேசிய கபடி அணித் தெரிவில் மட்டக்களப்பு  கிரான்  மற்றும் கோரகல்லிமடுவை சேர்ந்தவர்கள் தெரிவாகியுள்ளனர்
இதில் கோரகல்லிமடு கணேஷ் விளையாட்டுக் கழக கபடி அணி வீராங்கனையும்,  கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலைய உடற்கல்வி ஆசிரியருமான கோகலிகா அவர்களும்  கிரானை  சேர்ந்த கிரான் மத்திய கல்லூரியின் பழைய மாணவிகளும் , கிரான் கருணா ஐக்கிய விளையாட்டு கழக வீராங்கனைகளுமான  ஆர்.கஜேந்தினி மற்றும் எஸ்.சிந்துஜா ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மண்ணிலிருந்து தேசிய அணிக்கு சென்று சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் வீராங்கனைகளுக்கு  எமது இனிய வாழ்த்துகள்.