மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் பெய்த அடைமழையினால் தேங்கியுள்ள வெள்ள நீரினை வழிந்தோடச் செய்யும் பணிகளை உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொண்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஷின் பணிப்புரைக்கு அமைவாக ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடிகான்களை சுத்தம் செய்து வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணிகள் (03) மேற்கொள்ளப்பட்டன.